புதன், 3 பிப்ரவரி, 2010

எழு தோழனே!

எழு தோழனே!
முழு உலகையும்
நம துறவென ஆக்குவோம் - அதை
நம் கையிலே தூக்குவோம்.

சிலர் ஆழவும் - ஒரு
சிலர் வாழவும் - உள
உயர் விதிகளை மாற்றுவோம்.
புலர் வேளையில்
மலர்ப் பூமியை
புதி தானதாய் அக்குவோம்
அலர் நீங்கிட அறவாளினால்
அடி மைத்தனம் போக்குவோம்.

பிறர் வாழ்ந்திடப் பலர் மாய்கிற - இழி
நிலைமயை நீக்குவோம்
உழைக்கின்றவர் உயர்வெய்திட
உயிர்த் தீயினை ஊற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக