யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் தமிழ்த் திரைப்படப் பாடகரான மாணிக்க விநாயகம் ("இவர் இதுவரை ஒரு ஒழுங்கான பாடல் பாடியதாக நான் அறியவில்லை"- இது அவர் தவறு அன்று) உள்ளடங்கலான இந்தியப் பாடகர் குழுவொன்று இசைக்கச்சேரி செய்ய உள்ளதாக நண்பர் வாயிலாக அறிந்தேன். இது இலங்கையின் முதல்தர (அறுவை, அலம்பல் அற்ற) வானொலியான சூரியனினதும், நடுநிலை தவறாத நாளிதளான தினகரனினதும் ஏற்பாட்டில் இடம்பெற்றது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
ஊர் இளவட்டம் 20 கிலோமீற்றர் சைக்கில் பயணம் செய்து கச்சேரி பாக்கப் போறதா எனக்கு தகவல் வந்தது. அந்தப் பயணப் பம்பலுக்காக நானும் போக முடிவெடுத்தன். இரவுக் கூத்து என்பதால் அப்பாவிடம் தகவலைத் தெரிவிப்பது அவசியமாகப் பட்டது. ஆனால், அவரின் பதிலோ “போன கச்சேரியிலை நடந்தது தெரியுமே? கவனம்” என எச்சரிக்கையாய் விழுந்தது.
என்ன போன இசைநிகழ்விலை நடந்தது? நடத்தினவை தொடக்கம் இந்தியாவில் இருந்து வந்த விஜய் அன்ரனி வரை நிகழ்ச்சி பெரிய வெற்றி எண்டுதானே பேட்டி குடுத்தவை. பொடியளிட்டை லேசாக் கதையைவிட்டன். என்னண்ணை உங்களுக்கு ஒண்டும் தெரியாதே? வானத்தில மண், தண்ணி, (மூத்திரம் உட்பட) நிரப்பின போத்திலுகள் பறந்தது (லைற்றுக்கு முன்னால பறந்து வண்ணமயமான வானவேடிக்கையாக அமைந்ததாம்), பொலிஸ் அடிச்சுத் துரத்தினது, ஒண்டும் நீங்க கேள்விப்படேல்லையே? என்டாங்கள்.
இப்பிடியே கடந்துபோன கலவரங்களப் பத்திக் கதைச்சுக்கொண்டே ஒருமதிரி 8மணிபோல துரையபப்பா ஸ்ரேடியத்துக்குப் போய்ச் சேந்தம். அங்க சனம் வெளியில போறது கொஞ்சம், உள்ளுக்குப் போறது கொஞ்சமா இருக்க, எனக்கு ஒருவேள நிகழ்ச்சி முடிஞ்சுதோ? எண்ட சந்தேகம் வந்திட்டுது. உள்ளுக்குப் போனாப் பிறகுதான் விளங்கிச்சு, போனவை நிகழ்ச்சி முடிஞ்சு போகேல்ல, இருக்கச் சகிக்காமல் போகினமெண்டு. மேடையிலை நிகழ்ச்சி செய்ய வந்த பொம்பிளையளை விட பாத்த பொம்பிளையள் குறைவு. அதேமாதிரி, நிகழ்ச்சிக்கு நடந்து வந்த ஆம்பிளையள் மிகக்குறைவு, மிதந்து வந்தவைதான் முக்காவாசி. அடுத்த நிகழ்ச்சிய சோமபாண வியாபாரிகள்தான் நடத்துவினை, ஏனெண்டால் இதுகளாலை நிறைய வருமானம் அவைக்குத்தானே.
நாலு மங்கலான திரைகள்ளையும் ஒரு மேடையிலையும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்திச்சு. சுத்திவர நிறயப் பொலிஸ் நிண்டாலும், பரவலாப் பலரும் சுதந்திரமாத் தம் அடிச்சுக்கொண்டு திரிஞ்சிச்சினம். சரி மேடயில என்ன நடக்குதெண்டு முயற்சி செய்து முன்னுக்குப் பேப்பாத்தன். நல்ல கல(குலு)க்கலான நடனமொண்டு போச்சுது. அது முடிய, இந்தியாவிலிருந்து வந்த கலைஞற்றை பாட்டுக்கள் போச்சுது. அதுகள்ள விசேஸமாச் சொல்லக்கூடியதா “சின்ன வீடா வரட்டுமா…” மாதிரி நிறையத் தத்துவப்பாடல்களைப் பாடிச்சினம். இதில ஒரு முக்கியமான வி~யம் பாருங்கோ, பாத்தவை யாரும் கடசிவரை (எ.இ.மனோகரன்ர பாட்டுக்களைத் தவிர) கைதட்டேல்லை. சிலநேரங்கள்ள மேடையில இருந்து கெங்சிக்கூடக் கேட்டுப் பாத்தினம். பதிலுக்குத் தூசணங்கள் பறந்திச்சே தவிர ஒரு மரியாதைக்குக் கூடச் சனம் கைதட்டேல்லை எண்டாப் பாருங்கோவன். பாட்டுகளுக்கிடையில பயங்கரவாதத்தை அழிச்ச தலைவருக்கு மறக்காமல் நன்றி சொல்லிச்சினம். எனக்கெண்டா மினக்கெட்டு வந்ததுக்கு ஒரு உருப்படியான பாட்டாவது படிக்க மாட்டாங்களோ என்ட கவலை. ஆனாப் பக்கத்தில நிண்டவனுக்கு வேட்டக்காரன் - புலி உறுமுது என்ட பாட்டில்லயே என்டு கோபம். அதுக்குள்ள பிற்பாட்டுக்கு வந்த உறண்டை ஒன்டு வளைஞ்சு நெளிஞ்சிச்சு, ஆரெண்டா? சக்தியின்ர குப்பஸ்ராறாம்.
நான் இந்த அநியாயங்களுக்குள்ள என்னோட வந்த நாசகாரக் கும்பலையும் தவற விட்டுட்டன். இன்னும் கொஞ்சநேரம் நிண்டால் மண்டை வெடிக்கும் போல இருந்திச்சு. வெளியிலை வந்து சும்மா வளவுக்குள்ள நிண்ட சைக்கிளைப் பாதுகாத்ததுக்குப் பத்துருவாயைக் குடுத்துவிட்டு, குண்டி நொந்தாலும் அதைக் கணக்கெடுக்காமல் வீட்ட பறந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக