மீண்டு வா சே குவேரா!
மீயுயர் இதய வீரா!
எல்லைகள் கடந்த ஊரா!
மானுட விடுதலைக்காய் மரணத்துள் வாழ்ந்தவனே,
மானுடம் மரணித்தபோது அதைனை நீ வென்றனையே.
உலகை ரட்சிக்க வந்த தேவனா நீ - இல்லை
உழைப்பைக் கர்ச்சிக்க வந்த தீரனே நீ.
தந்தை மார்க்சின் தனி வளிகாட்டலே – எந்தையே
இந்த யுகத்தின் இளவலே.
மார்க்ஸ் எனும் அறிஞன் மாற்றத்தை வேண்டினான்
சே என்னும் வீரன் அதைச் செயலிலே காட்டினான்.
முதலிடமிருந்து 3ஆம் உலகினை மீட்க
முயன்றவனே – அதற்காய்
முற்றும் துறந்த முனிவனே – பல
மூர்த்தங்களான கவிஞனே.
மீண்டும் வா சே குவேரா!
மீயுயர் இதய வீரா!
மீட்டுவோம் இடது வீணை.
வேண்டுதல் செய்யமாட்டோம் - வெறும்
வெகுளியாய் எழவும் மாட்டோம்.
தொண்டுகள் செய்திறஞ்சும் - நம்
தோழரின் உரிமை மீட்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக