ஊடகங்களில் உரைக்கமுடியா
உண்மைகளாகவும்!
பராயமடைந்த சுயநினைவுள்ளோரின்
காணாமல் போதல்களாகவும்!
கள்ளமற்றோரின் கைதுகளாகவும்!
குற்றவாளிகளின் சுதந்திர வானமாயும்!
அப்பாவிகளுக்கான புனர்வாழ்வாகவும்!
அடிதெரியாத அழித்தொளிப்புகளாகவும்!
இனந்தெரியாதோரின் கடத்தல்
கொலைகளாகவும்!
வேள்ளைவான்களாகச் சிலநேரங்களில்
இனங்காணப்பட்டும்!
இன்னும் தொடர்கிறது…..
இதில் பெரிய அதிகாரமும் - அதன்
ஆசிர்வாதத்துடன் சின்ன அதிகாரமும்
குடும்பமாகக் குலம்வாழச் சேர்க்கிறார்
இவற்றையெல்லாம் இடித்துச் சொன்னேன்
இறைவன் நின்று அறுப்பானாம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக