இனிமேல் அரச நிறுவனங்களில் தேசிய கீதம் தமிழில் பாடப்படமாட்டாது. இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் நமக்கு வாகனங்களின் இலக்கத்தகட்டில் சிங்கள சிறி இடப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது. (சிலருக்கு தனிச் சிங்களச் சட்டத்தை நினைவு படுத்தலாம். ஆனால் வித்தியாசம் விளங்கிக் கொள்ளப்படவேண்டியது அவசியம்.) அதற்கு எதிராக "நண்டெழுத்து நமக்கு வேண்டாம்" எனப் பெரும் எதிர்ப்புக்களும், அபத்தமான பல போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டது 50களில்.
இன்று அபிவிருத்தி, ஆச்சரியம் எனச் சொல்லிக்கொண்டு அசுமாத்தமே இல்லாமல் இலங்கைத் தீவு மீண்டும் இருளுக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் சுழலில். இவ்விடயம் அராயகத்தின் இன்னொரு அடிவைப்பாக அமைகின்றது. விலைவாசியின் மிக வேகமான உயர்வு, 40 000க்கு மேற்பட்ட பட்டதாரிகள் உட்பட பல லட்சக்கணக்கானோருக்கு வேலையின்மை, மீகுடியேறிய மக்கள் இன்னும் இறுதி யுத்தகால நிலைமைக்குள் வைக்கப்பட்டு இருத்தல் போன்ற பாரிய பிரச்சினைகளுள் இந்த வாய்ச்சவடல் எத்தகைய முக்கியத்துவப்படுத்தப்படுகிறது? என்பதை நாம் பார்க்கவேண்டும்.
"இந்தத் தேசிய கீதமெல்லாம் நம் தேசத்தின் ஓர் உயிரின் முன் தூசி"
ஆனால். இந்த மக்கள் நலனில் அதிக அக்கறையுள்ள அரசியல்வாதிகளோ நம்மை 50களில் கொண்டுபோய் விட்டுவிட்டு மீடும் கடந்தகால நிலைமைகளை மீழ்உருவாக்கம் செய்ய முயல்கிறார்கள். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக இம்முறை தமிழ் மொழிமூலம் ளுடுயுளு பரீட்சை எழுதிய எவரும் சித்தியடையாமையையும், வட கிழக்குப் பிரதேச அரச ஊழியர்களாக இப்போது அதிகமான சிங்களவர்கள் நியமிக்கப்படுவதையும் (அவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவிகளுக்கு மாத்திரம் ஒரு சில தமிழர் நியமிக்கப்படுகின்றனர்) கூறலாம்.
தமிழ்க் கூட்டணி மீண்டும் எழுபதுகளில் சொன்னவற்றை அப்படியே அச்சரப் பிசகின்றித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது. அது இந்தியாதான் இலங்கைத் தமிழருக்கு விடிவைப் பெற்றுத் தரவேண்டும் என்கிறது. இதைத் தாண்டிச் சிங்களத் தலைமை 50 களுக்குக் கொண்போய் சிங்கள மக்களை உணர்சிவசப்படுத்தி வயித்தில் அடிக்கப் பார்க்கிறது.
இந்நிலையில் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். மிகவும் சுலபமாகக் கடந்த காலத்தை மறந்து விட்டு, இந்தப் பேய்க்காட்டு அரசியலில் விழுந்து ஏமாந்து அழியப் போகிறார்களா? அல்லது கடந்தகாலப் படிப்பினைகளைக் கொண்டு சரியான போராட்ட மார்க்கத்தைத் தெரிவுசெய்து போராடப் போகிறார்களா?
"நாங்கள் போராட்டத்தால் நல்லா அனுபவிச்சிட்டம், இனி உந்தப் போராட்டம் கீராட்டம் பற்றியெல்லாம் வந்து எங்களோட கதயாதையுங்கோ" என்பதுதான் ஒரு சாதாரண ஈழத் தமிழனின் இன்றைய நிலைப்பாடு. ஆனால் வாழ்க்கையோ நினைக்கிறமாதிரி இல்ல. அதிகாரம் அமைதியாய், சந்தோசமாய் இருக்க ஒருநாளும் அனுமதியாது.
கரைகள் ஓய்வை விரும்பிநாலும் அலைகள் விடுவதில்லை
மரங்கள் ஓய்வை விரும்பிநாலும் காற்று விடுவதில்லை
ஓடிஓடி ஒளிந்தாலும் வாழ்க்கை விடுவதில்லை........!
சுடும்வரை நெருப்பு! சுற்றும்வரை பூமி! போராடும்வரை மனிதன்!
நீங்க சொன்னது ஆனா போராடினா வெள்ளை வானெல்லோ வருகுது
பதிலளிநீக்கு