வன்னி வள மண்ணில்
வாழும் மனிதருக்கோர் வீடில்லை
தேடி வருவோர்க்கு
நாடி நலம் நல்குமவருக்கோர்
வாசல் படியில்லை
விளம்பரத் தட்டிகள் மட்டும்
விண்ணை முட்டி முழைக்கிறதே!
செம்மணியில் விதைக்கப்பட்ட
எம்மவர் சவக்குழிமேல்
விளம்பரப் பதாகைகள்
விளைவு கொண்டு நிற்கிறதே!
யாருக்காய் அவர் மாண்டார்?
யாழின் வரவேற்பில்
யாரை வரவேற்க அங்கவர் புதைபட்டார்?
உண்மை புரிகிறதா யாழ் மானத்தின் உத்தமரே?
காலிழந்த பிஞ்சுகளைத் தாங்க ஒரு
கைத்தடிக்கு மரமில்லை,
கொன்ரெயினர்களில் எங்கு கொண்டுசெல்கிறார்கள்?
மணல்காட்டில் வீடு கட்ட மாமனுக்கு
மணலனுமதியில்லை
மணலனுமதியில்லை
வந்த லொறி சும்மா போகாமல்
சுண்ணாம்பைச் சுமக்கிறதாம்
உதுக்குத்தான் உவளவுமென்டு
உரைத்ததின்னும் உறைக்கேல்லை!
உதைய சூரியனுக்கும் வீட்டுக்கும் ஓட்டைப்போட்டு
ஒட்டாண்டியானோமே!
தொப்புள் கொடி இப்ப
உறிஞ்சும் ஸ்றோவாக ஆனதைய்யா!
நஞ்சுகளை உமக்கனுப்பி
நல்லி ரத்தம் உறிஞ்சுதணை!
ஐஞ்சாறு நூற்றாண்டாய் அடிமைகளாய் இருந்துவிட்டோம்
அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழவேணும்
இனியும் காலணியாய் இருக்க நாம் சம்மதித்தால்
கடைசிவந்தும் அணையாது அனுமர்கள் ஆக்கிய தீ..............