பணயக்கைதி என்ற வகையில் என்னைச் சில வினாடிகளில் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று சிறைச்சாலைப் பாதிரியார் இப்போதுதான் எனக்குத் தெரிவித்தார். எனது பொருட்களை இங்கிருந்து எடுத்துச்செல்ல முயற்சிசெய்யுங்கள். ஒருவேளை அவை என்னை நினைவுபடுத்த உதவும்.
எனது வாழ்வு முழவதிலும் ஒரு லட்சியத்தைப் பின்பற்றி ஒழுகி வந்தேன். ஆந்த லட்சியத்துக்குக் கடைசிவரை நான் உண்மையாக நடந்துகொண்டேன் என்பதை எனது நண்பர்கள் அறிவார்களாக! எனது நாடு வாழட்டும் என்பதற்காக நான் இறக்கிறேன் என்பதை என் நாட்டு மக்கள் அறிவார்களாக.
கடைசிமுறையாக எனது மனச்சாட்சியைத் தொட்டுச் சோதித்து விட்டேன். வருந்துவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதை நீங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. இன்னொருமுறை நான் பிறப்பேனேயானால் இதே பாதையிலேதான் மீண்டும் செல்வேன்.
கம்யூனிஸம் என்பது உலகைப் புதுப்பிப்பது. அது ஒரு ஒளிபொங்கும் விடியலைத் தோற்றுவிக்கும். அதற்காகச் செயலாற்றிக்கொண்டு வருகின்றது.
சென்று வருகிறேன் ! பிரான்ஸ் நீடூழி வாழ்க !